அரக்கர் செய்த உதவி 2

2. பிராட்டிக்குச் செய்த உதவி எவ்வுலகிற்கும் தாயிருக்கும் வண்ணமான அவனும் கருணையிலாதவனாம்படி “தேவ்யா காருண்யரூபயா” என்று கருணையே வடிவெடுத்தவளான பெரிய பிராட்டியாரை ஹிம்சித்தார்கள் அரக்கர் என்றே நாம் கண்டிருக்க, அவர்கள் எவ்வாறு உதவி செய்தார்கள் எனில், எம்பெருமானைக் காட்டிலும் விஞ்சியிருக்கும் அவள் கருணையை அவள் திருவாக்காலேயே இவ்வுலகத்திற்கு வெளிப்படுத்தியமையாம். சுரிகுழல் கனிவாய்த் திருவினைப் பிரித்த கொடுமையிற்